பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தற்போது அதிக படங்களில் நடித்து வரும் தமிழ் நடிகர்களின் பட்டியலில் விஜய சேதுபதி, ஜி.வி.பிரகாஷின் பெயர்கள்தான் இடம்பெற்று வருகின்றன. ஆனால் சந்தானம் என்ற ஒரு நடிகரின் கைவசம் தற்போது ஏழு படங்கள் இருப்பதை யாரும் அறியவில்லை போலும். ராம்பாலா இயக்கிய தில்லுக்குத்துட்டு படத்தை அடுத்து சர்வர் சுந்தரம், ஓடி ஓடி உழைக்கனும், சக்கை போடு போடு ராஜா, மன்னவன் வந்தானடி ஆகிய படங்களில் நடித்து வரும் சந்தானம், அடுத்த படியாக மூன்று கதைகளை ஓகே பண்ணி வைத்திருக்கிறார்.
மேலும், வளர்ந்துவரும் சில ஹீரோக்கள் ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் பட டைட்டில்களை தங்களது படங்களுக்கு வைத்து வரும் நிலையில், சந்தானமோ, சில சூப்பர் ஹிட் பாடல்களின் வரிகளை தனது படங்களுக்கு டைட்டீலாக்கி வருகிறார். எம்ஜிஆரின் ஓடி ஓடி உழைக்கனும் பாடலை ஒரு படத்துக்கு தலைப்பாக்கியிருப்பவர், இன்னொரு படத்திற்கு சிவாஜியின் சக்கை போடு போடு ராஜா என்ற பாடல் வரியை வைத்திருக்கிறார். இந்நிலையில், அடுத்தபடியாக தான் நடிக்கயிருக்கும் மூன்று படங்களுக்கு ரஜினியின் ஹிட் பாடல்களின் வரிகளை டைட்டீலாக்கலாம் என்று கூறியுள்ளாராம். அதனால் சந்தானத்திடம் கதை சொல்லி ஓகே செய்துள்ள இயக்குனர்கள், தங்கள் கதைக் கேற்ற ரஜினிபட பாடல் வரிகளை ஆராய்ந்து வருகிறார்கள்.