இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
விக்ரம் பிரபு தனது பர்ஸ்ட் ஆர்ட்டிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் முதல் படம் நெருப்புடா. இதில் அவருடன் நிக்கி கல்ராணி, வருண், நான் கடவுள் ராஜேந்திரன், நாகிநீடு, ஆடுகளம் நரேன், மதுசூதனராவ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். படம் பற்றி விக்ரம் பிரபு கூறியதாவது:
தமிழ் சினிமாவில் தீயணைப்பு வீரன் பற்றி அதிகமான படம் வந்ததில்லை. இது ஒரு தீயணைப்பு வீரனின் கதை. ஒரு இடத்தில் தீ பிடித்தவுடன் ஓடி வந்து தீயை அணைப்பது மட்டுமே ஒரு தீயணைப்பு வீரனின் பணி அல்ல. அதையும் தாண்டிய சமூக பணி அவனுக்கு இருக்கிறது. நெருப்பு எதை வேணாலும் எடுத்துட்டு போகலாம் ஒத்த உசிரை எடுத்துட்டு போக விடமாட்டேன்னு அந்த தொழிலை தெய்வமாக நினைக்கிற ஒருவனின் கதை.
சென்னை அருகில் உள்ள கண்ணகி நகரில் தான் பெரும்பகுதி படப்பிடிப்பு நடந்தது. 50 ஆயிரம் வீடுகளை கொண்ட பெரிய பகுதி. ஒரு பகுதியில் ஏதாவது கலவரம், அடிதடி நடந்து கொண்டிருக்கும் இன்னொரு பகுதியில் நாங்கள் படப்பிடிப்பு நடத்துவோம். ஊருக்கு நடுவில் பிரமாண்ட கிளாக் டவர் அமைத்து படமாக்கினோம். பெரும்பகுதி படம் நெருப்புக்கு இடையேதான் நடக்கும். படத்திற்கு முதலில் நெற்றிக்கண், தீ போன்ற தலைப்புகள்தான் யோசிக்கப்பட்டது. கபாலியின் நெருப்புடா பாடல் புகழ்பெற்றதும் தாணு சாரிடம் அனுமதி பெற்று நெருப்புடா தலைப்பு வைத்தோம். என்றார் விக்ரம் பிரபு.