'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி |
சமுத்திரகனி இயக்கி தயாரித்து கதையின் நாயகனாக நடித்த 'அப்பா' கடந்த ஆண்டு வெளியான மிகச்சிறந்த படம். தமிழில் வர்த்தக வெற்றிபெற்றதை தொடர்ந்து இந்த படத்தை மலையாளத்திலும் ரீ-மேக் செய்து வருகிறார். 'ஆகாசமிட்டாய்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சமுத்திரக்கனி நடித்த வேடத்தில் ஜெயராம் நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.
இப்படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பும் சமீபத்தில் கொச்சியில் துவங்கியது. படப்பிடிப்பு துவங்கிய ஒரு சில நாட்களிலேயே வரலட்சுமி சரத்குமார் ஆகாசமிட்டாய் படத்திலிருந்து விலகிவிட்டார். இது சம்பந்தமாக வரலட்சுமி சரத்குமார் சில நாட்களுக்கு முன் தனது ட்விட்டர் பக்கத்தில் ''ஆணாதிக்க பிரச்சனைகளால் 'ஆகாசமிட்டாய்' படத்திலிருந்து விலகுகிறேன்'' என்று ட்வீட் செய்திருந்தார்.
உண்மையில் சொகுசு ஹோட்டலில் தங்க வைக்க மறுத்து சர்வீஸ் அப்பார்ட்மெண்டில் தங்க சொன்னதால் தான் வரலட்சுமி விலகினார். வரலட்சுமி விலகியதை தொடர்ந்து இப்போது அந்த கேரக்டரில் இனியா நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் நடந்து வருகிறது.