பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சமூக வலைத்தளங்களில் சமீப காலமாக எந்த ஒரு படம் வெளிவந்தாலும் அந்தப் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்துக் கொண்டிருக்கும் போதே சில ஊடகங்கள் விமர்சனங்கள் என்ற பெயரில் காட்சிக்குக் காட்சி விமர்சித்துக் கொண்டிருக்கின்றன. அம்மாதிரியான ஊடகங்களைப் பற்றிப் பேசியிருந்தால் கூடப் பரவாயில்லை. மொத்தமாக விமர்சனங்களுக்கே தடை விதிக்க வேண்டும் என்று ராகவா லாரன்ஸ் இன்று ஒரு காமெடி பேச்சைப் பேசியிருக்கிறார்.
இன்று காலை நடைபெற்ற 'நெருப்புடா' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், ரஜினிகாந்த், ராகவா லாரன்ஸ் அனைவருமே திரைப்பட விமர்சனங்களைப் பற்றி தங்களது கருத்துக்களைப் பேசினர். மற்றவர்களாவது வேண்டுகோள், கவனத்தில் கொள்ளுங்கள், யாரையும் காயப்படுத்தாதீர்கள், உடனே விமர்சனம் செய்யாதீர்கள் என்ற ரீதியில் பேசினார்கள்.
ஆனால், ராகவா லாரன்ஸ், திரைப்பட விமர்சனங்களை படம் வெளியான மூன்று நாட்களுக்குள் விமர்சிக்கத் தடை விதிக்க ஆவண செய்ய வேண்டுமென விஷாலைக் கேட்டுக் கொண்டு தன்னுடைய அறியாமையை வெளிப்படுத்தினார்.
'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்திற்குக் கிடைத்த விமர்சனங்களால் ராகவா லாரன்ஸ் நிறையவே பாதிக்கப்பட்டிருக்கிறார் போலிருக்கிறது. நல்ல படங்களை எடுத்தால் யார் விமர்சிக்கப் போகிறார்கள். 'மொட்ட சிவா கெட்ட சிவா' மாதிரியான படங்களுக்கு மோசமான விமர்சனங்கள் கிடைக்காமல் ஆஸ்கர் அவார்டா கிடைக்கும்.