டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
திருமணத்துக்குப் பிறகு அருள்நிதி நடித்த படம் - 'ஆறாது சினம்'. அறிவழகன் இயக்கிய இந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. அதனால் அப்ஸெட்டான அருள்நிதி, நடிப்புக்கு பிரேக் கொடுத்துவிட்டு தனக்கு பிரேக் கொடுக்கும் அளவுக்கு பொருத்தமான கதைகளை தேர்வு செய்யும் திட்டத்தில் கதைகளை கேட்க ஆரம்பித்தார்.
அழகிய தீயே, மொழி, உப்புக்கருவாடு போன்ற படங்களை இயக்கிய ராதா மோகன் சொன்ன ஒரு கதை அருள்நிதிக்கு பிடித்துப்போனது. உடனடியாக அந்தப் படத்தை தொடங்க சொன்னார். 'பிருந்தாவனம்' என பெயரிடப்பட்ட அந்தப் படத்தில்தான் தற்போது பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
பாலிவுட்டில் வெளியான ஷாருக்கானின் ஃபேன் பட ஸ்டைலில், ஒரு நடிகருக்கும் அவருடைய ரசிகர் ஒருவருக்கும் இடையே நடக்கும் சம்பவங்களை வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
'பிருந்தாவனம்' படத்தில் காது கேளாதவராக நடிக்கிறார் அருள்நிதி. 'பலே வெள்ளையத் தேவா' படத்தில் நடித்த தன்யா பாலகிருஷ்ணன் 'பிருந்தாவனம்' படத்திலும் நாயகியாக நடிக்கிறார். இந்தப்படத்தை முடித்ததும், அறிமுக இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' என்ற படத்திலும் நடிக்கிறார் அருள்நிதி.