பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மார்ச் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான 31ம் தேதி “கவண், டோரா, அரசகுலம், அட்டு, நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல, செவிலி” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் போட்டி என்பதே 'கவண்' படத்திற்கும், 'டோரா' படத்திற்கும்தான். கடந்த மூன்று நாட்களாக திருப்தியான வசூலைக் கொடுத்துக் கொண்டிருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் சொல்கிறார்கள்.
'கவண்' படத்தின் முதல் பாதி சிறப்பாக இருப்பதாகவும், 'டோரா' படத்தின் இரண்டாம் பாதி சிறப்பாக இருப்பதாகவும்தான் பெரும்பாலான ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். 'கவண்' படத்தின் இரண்டாம் பாதி திரைக்கதை வழக்கமான கமர்ஷியல் சினிமாவாகவும், 'டோரா' படத்தின் முதல் பாதி அழுத்தமாக இல்லை என்பதும்தான் பெரும்பாலான ரசிகர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
இருந்தாலும் 'கவண்' படம் விஜய் சேதுபதி இதுவரை நடித்து வெளிவந்த படங்களிலேயே அவருக்கான சிறந்த ஓபனிங்காக அமைந்துள்ளது என்கிறார்கள். இப்படம் கடந்த மூன்று நாட்களில் சுமார் 9 கோடி வரை வசூலித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
'டோரா' படம் கடந்த மூன்று நாட்களில் சுமார் 5 கோடி வரை வசூலித்திருக்கும் என்றும் தகவல். நயன்தாரா தான் தமிழ் சினிமாவின் வசூல் நாயகி என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளதாம். அவருக்கென்று தமிழ் ரசிகர்களிடம் இருக்கும் தனி வரவேற்பே அதற்குக் காரணம் என்கிறார்கள்.