இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
பாகுபலி படத்தை இந்திய அளவில் பிரமாண்ட படமாக இயக்கிய ராஜ மவுலி, தற்போது பாகுபலி-2 படத்தையும் பிரமாண்டமாக உருவாக்கியிருக்கிறார். ஏப்ரல் 28-ந்தேதி வெளியாகும் இந்த படத்தின் ஆடியோ விழா சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் அதிக நேரம் பேசாத ராஜமவுலி படக்குழுவினருக்கு தனது நன்றியை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ஆனால் தமன்னாவின் பெயரை மட்டும் அவர் குறிப்பிடவில்லையாம்.
இதனால் படப்பிடிப்பு நடந்தபோது தமன்னா ஏதேனும் கால்சீட் சொதப்பல் செய்து விட்டாரா? இல்லை வேறு வகையில் அவருக்கும் ராஜ மவுலிக்குமிடையே ஏதாவது பிரச்சினையா? என்கிற ரீதியில் தெலுங்கு மீடியாக்கள் பரபரப்பு செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். மேலும், பிர பாஸ், அனுஷ்கா, ராணா ஆகியோரின் நடிப்பு குறித்து பேசிய ராஜ மவுலி, தமன்னாவை கண்டுகொள்ளாமல் விட்டதினால், ஒருவேளை அவருக்கு பாகுபலி-2வில் முக்கியத்துவம் வாய்ந்த வேடம் இல்லையோ அதனால்தான் அவரை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டாரோ என்றும் செய்தி வெளியிட்டு வருகிறார்கள்.