‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷாலை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் தனித்தனியாக போட்டி போட்ட மூன்று அணியினர் இப்போது ஓரணியாக இணைந்துள்ளனர்.
தயாரிப்பாளர் சங்கத்திற்கு வருகிற ஏப்., 2-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் விஷால், ராதாகிருஷ்ணன், டி.சிவா, கலைப்புலி ஜி.சேகரன் மற்றும் கேயார் என ஐந்து பேர் தலைமையிலான அணியினர் களம் இறங்கினர். இதில் ஏற்கனவே தாணுவின் வழிகாட்டுதலில் செயல்படும் டி.சிவா அணி, ராதாகிருஷ்ணன் அணியில் இணைந்து ஓரணியாக மாறினார். இதற்கான நிகழ்ச்சி கடந்தவாரம் நிகழ்ந்தது. அப்போது பேசிய தாணு, விஷாலை கடுமையாக தாக்கி பேசினார். அதோடு தகுதியற்ற விஷால் இந்த பதவிக்கு வரக்கூடாது, அவரை தோற்கடிக்க கேயார், ஜி.சேகரன் ஆகியோரும் தங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
இந்நிலையில் கலைப்புலி ஜி.சேகரன் அணியினர், இன்று(மார்ச் 29ம் தேதி) ராதா கிருஷ்ணனுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். இதற்கான நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அப்போது தாணு முன்னிலையில் ராதாகிருஷ்ணனுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தார் ஜி.சேகரன்.
இதன்மூலம், விஷாலை தோற்கடிக்க மூவர் அணி, ஓரணியாக இணைந்துள்ளனர். இதில் யார் வெல்லபோகிறார்கள் என்று ஏப்.,2-ம் தேதி தெரிந்துவிடும்.