டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
வாரிசு நடிகர்களில் வேகமாக வளர்ந்து வந்த அதர்வாவை 'கணிதன்' படத்துக்குப் பிறகு காணவில்லை. ஆனால், ஒரே நேரத்தில் 5 படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் எனற தகவல் மட்டும் அதர்வா தரப்பில் சொல்லப்படுகிறது.
செம போத ஆகாத, ருக்குமணி வண்டி வருது, ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், இமைக்கா நொடிகள், ஒத்தைக்கு ஒத்த என ஐந்து படங்கள் அதர்வாவின் கைவசம் இருக்கிறதாம். இவற்றில் செம போத ஆகாத அதர்வாவின் சொந்தப்படம்.
அதர்வா நடித்து வரும் ஐந்து படங்களும் ஒவ்வொரு நிலையில் முடிந்தும் முடியாமலும் இருக்கின்றன. இவற்றில் 'செம போத ஆகாத' படம்தான் முதலில் வெளியாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் டீஸர் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது.
விரைவில் இப்படத்தின் பாடல்களும் வெளியாக உள்ளநிலையில் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. 'பாகுபலி 2' படத்தின் சென்னை, செங்கல்பட்டு வெளியீட்டு உரிமையையும் இந்நிறுவனமே வாங்கியுள்ளது.