தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உதவும் வகையில் லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளை சார்பில் 150 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதை தமிழர்களுக்கு வழங்கும் விழா ஏப்., 9-ம் தேதி இலங்கையில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த்தும் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் இங்குள்ள சில அரசியல் கட்சிகளின் எதிர்ப்பால், தனது பயணத்தை ரத்து செய்துவிட்டார். ஆனாலும் இனி இதுபோன்ற செயல்களை தடுக்காதீர்கள் என்று ரஜினி வேண்டுகோளும் வைத்தார்.
ரஜினி, இலங்கை பயணத்தை ரத்து செய்ததை சிலர் விமர்சனமும் செய்தனர். இந்நிலையில், இலங்கை தமிழர்களுக்கு ரஜினி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் இலங்கை தமிழர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில் ரஜினி மேலும் கூறியுள்ளதாவது: ‛‛இலங்கை தமிழர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பை ஊடகங்கள் மூலம் அறிந்தேன். இதற்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. நல்லதையே நினைப்போம். நல்லதே நடக்கும். நேரம் கூடி வரும்போது சந்திப்போம். நீங்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.