தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஹிந்தித் திரையுலகத்தைப் போலவே தமிழ்த் திரையுலகத்திலும் தற்போது நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் தயாராகி வருகின்றன. 30 வயதைக் கடந்த நாயகிகளான த்ரிஷா, நயன்தாரா இருவருமே நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள நான்கைந்து படங்களில் நடித்து வருகிறார்கள்.
நயன்தாரா, தனக்கு முக்கியத்துவம் உள்ள தனி நாயகியாக தமிழில் சில வருடங்களுக்கு முன்பே நடிக்க ஆரம்பித்தார். அப்படி அவர் நடித்து 2015ம் ஆண்டு வெளிவந்த முதல் படமான 'மாயா' படம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. அதன் பின் அவர் நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் அதிகம் நடிக்கவில்லை. ஆனால், தற்போது அவர் நடித்து வரும் படங்கள் நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள்தான்.
அந்த வரிசையில் இந்த வாரம் 'டோரா' படம் வெளிவர உள்ளது. இந்தப் படத்திற்குப் பிறகு “அறம், கொலையுதிர் காலம், இமைக்கா நொடிகள்” ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. சிவகார்த்திகேயனுடன் 'வேலைக்காரன்' படத்திலும் நடித்து வருகிறார்.
'டோரா' படமும் 'மாயா' படம் போலவே ஒரு பேய்க் கதைதான். ஆனால், 'டோரா' படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுவிட்டதால் படக்குழுவினர் கவலையில் உள்ளார்கள். குழந்தைகள் வந்து படத்தைப் பார்க்க முடியாது. இதனால் குடும்பத்துடன் பெண்களும் அதிகம் வர மாட்டார்கள். அதனால், 'டோரா' படம் நயன்தாராவிற்கு 'மாயா' படம் அளவிற்கான வெற்றியைத் தருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.