தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த ஆண்டு தெலுங்கில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் பெள்ளி சூப்புலு சுமார் ஒன்றரை கோடி பட்ஜெட்டி எடுக்கப்பட்ட படம் 40 கோடி வசூலித்து தெலுங்கு திரையுலகத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இதனை தருண் பாஸ்கர் தாஷ்யம் இயக்கி இருந்தார். விஜய் தேவரகொண்டா, ரித்து வர்மா நடித்திருந்தனர். விவேக் சாகர் இசை அமைத்திருந்தார், நாகேஷ் பெனாலி ஒளிப்பதிவு செய்திருந்தர். பிக்பென்ஞ் சினிமா என்ற நிறுவனம் தயாரித்திருந்தது.
இதன் தமிழ் ரீமேக் உரிமத்தை இயக்குனர் கவுதம் மேனன் வாங்கியிருந்தார். தற்போது அதனை தன் உதவியாளர் செந்தில் வீராசாமியை இயக்க கூறியுள்ளார். படத்தின் பட்ஜெட் 4 கோடி. இதில் விஜய் தேவர்கொண்டா நடித்த கேரக்டரில் விஷ்ணு விஷாலும், ரித்து வர்மா நடித்த கேரக்டரில் தமன்னாவும் நடிக்கிறார்கள். மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் இன்னும் முடிவாகவில்லை. விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. "கவுதம் மேனன் எனக்கு பிடித்த இயக்குனர். அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு இப்போது அவர் தயாரிப்பில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. விரைவில் அவரது இயக்கத்திலும் நடிப்பேன்" என்று கூறியுள்ளார் தமன்னா.