‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தமிழ்த் திரையுலகத்தில் திரைப்பட வெளியீட்டை முறைப்படுத்த வேண்டும் என்று கடந்த சில வருடங்களாகவே சிறிய தயாரிப்பாளர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், அது சம்பந்தமாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது பல சிறிய படங்களின் வெற்றிகளை பாதிக்கிறது. தமிழ்த் திரையுலகத்தில் சில முக்கிய சங்கங்கள் இணைந்து திரைப்பட கூட்டமைப்பு என்ற அமைப்பையும் வைத்திருக்கிறார்கள். இருந்தாலும் பட வெளியீட்டை அவர்களும் இதுவரை சரிப்படுத்தவில்லை.
நேற்று, ஒரே நாளில் 9 திரைப்படங்கள் வெளிவந்ததால் மீண்டும் படங்களின் வெளியீட்டை முறைப்படுத்த வேண்டும் என்று குரல் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. நேற்று வெளியான 9 படங்களில் இரண்டே இரண்டு படங்களுக்கு இடையில்தான் போட்டி இருக்கிறது. மற்ற படங்களைப் பார்க்க ரசிகர்கள் வராத நிலையே உள்ளது. 9 படங்களில் நான்கே நான்கு படங்கள்தான் பத்திரிகையாளர் காட்சியாகவும் திரையிடப்பட்டுள்ளன. பத்திரிகையாளர்களுக்குக் கூடத் திரையிட முடியாத சூழலில்தான் சில படங்கள் வெளியாகின்றன.
நேற்று வெளியான படங்களில் 'கடுகு, எங்கிட்ட மோதாதே' ஆகிய படங்களுக்கிடையே தான் போட்டியே இருக்கிறது. 'கடுகு' படத்தை சூர்யா வாங்கி வெளியிட்டதால் படத்திற்கு தியேட்டர்கள் தாராளமாகக் கிடைத்தது. விமர்சகர்களால் பாராட்டப்பட்டாலும் இப்படத்திற்கு பெரிய ஓபனிங் கிடைக்கவில்லை.
ஆனால், 'எங்கிட்ட மோதாதே' படத்திற்கு விமர்சகர்களின் பாராட்டும், தியேட்டர்களில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். 80களில் ரஜினி ரசிகர்களுக்கும், கமல் ரசிகர்களுக்கும் இடையிலான மோதல், கொஞ்சம் அரசியல் என இன்றைய ரசிகர்கள் பார்த்திராத விஷயங்களை இயக்குனர் யதார்த்தமாகச் சொல்லியிருக்கிறார் என படத்திற்குப் பாராட்டுக்கள் குவிகின்றன. ஒரு நாளிலேயே 40 தியேட்டர்களில் படம் கூடுதலாகத் திரையிடப்பட்டுள்ளதாக தயாரிப்பாளரே அறிவித்துள்ளார். படத்தின் பெயரில் இருப்பதைப் போலவே இப்படத்துடன் மற்ற படங்கள் மோதி வெற்றி பெற வாய்ப்பில்லை என்றே கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.