ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடந்த இரண்டு வாரங்களாக தலைநகர் டில்லியில் தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி போராடி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு உரிய தீர்வு எட்டப்படாத நிலையில் இவர்களை நேற்று நடிர் சங்கம் சார்பில் விஷால், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துனர்.
இந்நிலையில் விவசாயிகளுக்காகவும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்காரி மற்றும் அருண் ஜெட்லியை நடிகர்கள் விஷால், பிரகாஷ் ராஜ் ஆகியோர் சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ராஜ்... ‛‛விவசாயிகளின் பிரச்னைக்காகத்தான் நேற்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரியையும், இன்று அருண் ஜெட்லியையும் சந்தித்தோம். விவசாயிகளின் பிரச்னையை உடனடியாக கருத்தில் கொள்ள வேண்டும். இதை ஒரு மாநில விவசாயிகளின் பிரச்னையாக பார்க்காமல், ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளின் பிரச்னையாக பார்க்க வேண்டும் என்றார்.
நடிகர் விஷால் பேசுகையில், ‛‛விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவே வந்தோம், இதை முக்கிய பிரச்னையாக கருத்தில் கொண்டு தீர்வு காண வேண்டும், இனி விவசாயிகள் தற்கொலை நடக்க கூடாது'' என்றார்.
மத்திய அமைச்சர் உடனான சந்திப்பின் போது விஷால், பிரகாஷ்ராஜ் மற்றும் இயக்குநர் பாண்டிராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.