பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மகாபாரதத்தை இழிவுப்படுத்தியதாக கூறி நடிகர் கமல் மீது வழக்கு பதிவு செய்ய கோரி மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில், நடிகர் கமல்ஹாசன் தனியார் டிவி., ஒன்றுக்கு பேட்டியளித்தார். இதில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கமல், மகாபாரதத்தை மேற்கோள் காட்டி தனது விளக்கத்தை கொடுத்தார்.
இந்துக்களின் தெய்வநூலாக போற்றி வரும் மகாபாரதம் மற்றும் இதிகாசத்தை கொச்சைப்படுத்தும் கமலை கண்டிக்கிறோம் என்று கூறி இந்து மக்கள் கட்சி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தது.
இருதினங்களுக்கு முன்னர் கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமத்தை சேர்ந்த ஆதிநாதசுந்தரம் என்பவர் நெல்லை வள்ளியூர் குற்றவியல் கோர்ட்டில் இதேகருத்தை வலியுறுத்தி கமல் மீது நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், கும்பகோணத்திலும் கமல் மீது வழக்கு பதிவு செய்ய கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்து மக்கள் கட்சியின், கும்பகோணம் மாவட்ட செயலாளர் பாலா என்பவர், கும்பகோணம் 2வது மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மகாபாரதத்தை இழிவுப்படுத்தியதாக கூறி கமல் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டி மனு தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு ஏற்று கொள்ளப்பட இருக்கிறது.