பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
தமிழ்த் திரையுலகத்தில் இயக்குனர்கள் பலரும் நாயகர்களாகவும், குணச்சித்திர நடிகர்களாவும், வில்லன்களாகவும் மாறிக் கொண்டேயிருக்கிறார்கள். ஆனால், ஒரு சிலர் மட்டுமே தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து தங்களுக்கென தனி இடத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள்.
இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த ராஜகுமாரன், இயக்குனராக மாறி 'நீ வருவாய் என' என்ற வெற்றிப் படத்தை 1999ம் ஆண்டு கொடுத்தார். அதன் பிறகு அவர் இயக்கத்தில் வெளிவந்த 'விண்ணுக்கும் மண்ணுக்கும், காதலுடன்' ஆகிய படங்கள் தோல்வியடைந்தன. சுமார் 10 வருடங்கள் எந்த ஒரு தமிழ்ப் படத்தையும் இயக்காமல் இருந்தவருக்கு, தானே, நாயகனாக நடித்தால் என்ன என்ற ஆசை வந்தது.
அந்த ஆசையை 2013ம் ஆண்டு வெளிவந்த 'திருமதி தமிழ்' படம் மூலம் தீர்த்துக் கொண்டார். அந்த ஆண்டில் அதிகமாகக் கிண்டலடிக்கப்பட்ட நடிகர்களில் ராஜகுமாரனுக்குத்தான் முதலிடம். அந்தப் படத்திற்குப் பின் சந்தானம் நடித்த 'வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' படத்தில் சில காட்சிகளில் மட்டும் நடித்தார்.
ராஜகுமாரன் மீண்டும் நாயகனாக நடித்துள்ள 'கடுகு' படம் நாளை வெளிவர உள்ளது. இந்தப் படத்தை விஜய் மில்டன் இயக்கியிருப்பதால் ரசிகர்களுக்கும் ஒரு ஆறுதல். ராஜகுமாரனே இயக்கி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும். இருந்தாலும் படத்தை சூர்யா வாங்கி வெளியிடுவதால் படத்திற்கும் ஒரு எதிர்பார்ப்பு.
'புலி பாண்டி' என்ற கதாபாத்திரத்தில் புலி வேஷம் போட்டு ஆடுபவராக ராஜகுமாரன் நடித்திருக்கும் இந்த 'கடுகு' படம் அவருடைய நடிப்பு ஆசையைக் காப்பாற்றுமா என்பது இன்னும் 24 மணி நேரத்திற்குள் தெரிந்துவிடும்.