பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பவர்பாண்டி படம் மூலம் இயக்குனராகியுள்ள நடிகர் தனுஷ், தன் தாய், தந்தை, சகோதரி மற்றும் ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளதோடு, எதிர்காலத்தில், நம் மண் இசையே நமக்கு தேவை என்றார். நடிகர் தனுஷ் முதல் முறையாக இயக்கியுள்ள படம், பவர்பாண்டி. இதில், கதை நாயகனாக ராஜ்கிரண் நடித்துள்ளார். பிரசன்னா, ரேவதி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின், டீசர் வெளியீட்டு விழா, நேற்று நடந்தது. பின், நடிகர் தனுஷ் கூறியதாவது: உலகில், நல்லது, கெட்டது; அன்பு, வெறுப்பு என, இரண்டும் உள்ளது. இதில், நாம் எதை தேர்ந்தெடுக்கிறோம்; எதை நோக்கி போகிறோம் என்பது, நம் கையில்தான் உள்ளது. நேர்மறையான சிந்தனைகளை தேர்ந்தெடுத்தால், நிம்மதியாக இருக்கலாம்; இதுதான், பவர்பாண்டி.
இப்படத்திற்கான நம் மண்ணின் இசையை தர முயற்சித்துள்ளோம். எதிர்காலத்தில், நம் மண் இசையே நமக்கு தேவை. இப்படத்திற்கு, ராஜ்கிரண் கிடைத்தது மிகப்பெரிய ஆசிர்வாதம். உதவி இயக்குனர்கள், படத்தொகுப்பாளர், இசையமைப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. என்னை இந்தளவுக்கு உயர்த்திய அம்மா, அப்பா, சகோதர, சகோதரிகள் மற்றும் ரசிகர்களுக்கும் நன்றி.இவ்வாறு அவர் கூறினார்.
அம்மா, அப்பாவுக்கு நன்றி கூறிய தனுஷ், அவரது அப்பா, அம்மா யார் என்ற வழக்கு சர்ச்சை குறித்து, கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.