கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
விக்ரம் பிரபு நடிப்பில் கடைசியாக வெளிவந்த வீர சிவாஜி படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.எனவே அடுத்து வெளிவரவிருக்கிற 'சத்ரியன்' படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார் விக்ரம்பிரபு.சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் முதன்முறையாக ரௌடி வேடத்தில் நடித்துள்ளார் விக்ரம்பிரபு.சத்ரியன் படத்தில் நடித்து முடித்த கையோடு தற்போது, 'நெருப்புடா' படத்தில் நடித்து வருகிறார்..ஏறக்குறைய நெருப்புடா படமும் முடிவடையும் தறுவாயில் உள்ளது.இந்த படங்களுடன் 'பக்கா' என்ற புதிய படத்தில் நடிக்கிறார் விக்ரம் பிரபு.
இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். ஏற்கனவே நெருப்புடா படத்தில் விக்ரம் பிரபு - நிக்கி கல்ராணி ஜோடியாக நடித்துள்ளனர்.பக்கா படத்தில் மீண்டும் விக்ரம் பிரபு - நிக்கி கல்ராணி இணைகின்றனர்.இந்த படத்தில் மற்றொரு நாயகியாக இப்போது பிந்து மாதவியும் இணைந்துள்ளார். 'அதிபர்' படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரியம் பட நிறுவனத்தின் சார்பில் டி.சிவகுமார் தயாரிக்கும் இந்த படத்தை எஸ்.எஸ்.சூர்யா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.