'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடைபெற உள்ள தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் விஷாலை தோற்கடிக்கும் விதமாக மூன்று அணி, ஓர் அணியாக இணைய உள்ளனர்.
இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி 2017-19 ஆண்டுக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் 2-ம் தேதி நடைபெற இருக்கிறது. நடிகர் சங்கத்தை போன்று தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளன, கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது, சிறு தயாரிப்பாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர், திருட்டு விசிடி பிரச்னை... என ஏகப்பட்ட பிரச்னைகள் இருப்பதாக கூறி விஷால் தலைமையில் ஒரு அணியினர் களமிறங்கியுள்ளனர். இதுதவிர டி.சிவா தலைமையில் ஒரு அணி, ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு அணி, கலைப்புலி ஜி.சேகரன் தலைமையில் ஒரு அணி, கேயார் தலைமையில் ஒரு அணி என ஐந்து அணியினர் தேர்தலை களம் காண்கின்றனர்.
தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு வாரங்களே இருப்பதால் ஒவ்வொரு அணியினரும் மும்முரமாய் செயல்பட்டு வருகின்றனர். அதிலும் விஷால் அணியினர், நடிகர் சங்க தேர்தலின் போது நாடக நடிகர்களை ஊர் ஊராக சென்று ஒன்றிணைத்து ஓட்டு கேட்டதுபோன்று ஒவ்வொரு ஊராக சென்று தயாரிப்பாளர்களிடம் ஓட்டு வேட்டை நடத்தி வருகின்றனர்.
நடிகர் சங்கத்தில் இருப்பவர், தயாரிப்பாளர் சங்கத்தில் தலையிட கூடாது, தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிட தகுதியற்றவர் விஷால், அவர் தலைவராக வரக்கூடாது என தாணு உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தேர்தலில் விஷால் அணியை எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதுவரை தனித்தனி அணியாக செயல்பட்டு வந்த சிவா-ராதாகிருஷ்ணன்-ஜி.சேகரன் ஆகிய மூவரும் ஓர் அணியில் இணைந்து செயல்பட உள்ளனர். இதற்கான முறையான அறிவிப்பு நாளை மறுநாள் வெளியாக உள்ளது. சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஒரு பிரபல சினிமா நட்சத்திரம் முன்னிலையில் இந்த ஓரணியின் கூட்டம் நடைபெற இருக்கிறது. அப்போது யார், யார் எந்த பதவிக்கு போட்டியிட உள்ளார்கள் என்பதற்கான அறிவிப்பும் வௌியாக இருக்கிறது.
நடிகர் சங்க தேர்தலை போன்று தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலும் சூடு பிடிக்க தொடங்கியியுள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் சூடு பிடிக்கும் என தெரிகிறது.