'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
சமீபத்தில் வெளிவந்த படம் நிசப்தம். மிராக்கிள் பிலிம்ஸ் சார்பில் ஏஞ்சலின் டாவின்ஸி தயாரித்திருந்தார். மைக்கேல் அருண் இயக்கி இருந்தார். இந்தப் படம் குழந்தைகளுக்கு நிகழும் பாலியல் வன்முறை பற்றிய படம். தற்போது இந்தப் படத்தை அதன் தயாரிப்பாளர் ஏஞ்சலின் குழந்தைகளுக்கு இலசவமாக திரையிட்டுக் காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
அதன்படி, சென்னையில் உள்ள பிரசாத் தியேட்டரில் படம் குழந்கைளுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது. பின்னர் பாலியல் தொந்தரவில் இருந்து தப்பிப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனிதம் பவுண்டேஷன் அமைப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.
படம் முடிந்து வெளியில் வந்ததும், குழந்தைகள் ஒரு படம் பார்த்த மகிழ்சியில் வந்தார்கள். பெற்றவர்கள் கண்ணீருடன் வந்தார்கள். நிகழ்ச்சியில் நாரோ மீடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி நாசர், முதன்மை செயல் இயக்குநர் பிரபாலா சுபாஷ், பேபி சைதன்யா, நடிகர் அஜய், இயக்குநர் மைக்கேல் அருண், தயாரிப்பாளர் ஏஞ்சலின் டாவின்சி உள்ளிட்ட நிசப்தம் படக்குழுவினரும் கலந்துகொண்டனர்.