பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படம் குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் |
சமீபத்தில் வெளிவந்த படம் நிசப்தம். மிராக்கிள் பிலிம்ஸ் சார்பில் ஏஞ்சலின் டாவின்ஸி தயாரித்திருந்தார். மைக்கேல் அருண் இயக்கி இருந்தார். இந்தப் படம் குழந்தைகளுக்கு நிகழும் பாலியல் வன்முறை பற்றிய படம். தற்போது இந்தப் படத்தை அதன் தயாரிப்பாளர் ஏஞ்சலின் குழந்தைகளுக்கு இலசவமாக திரையிட்டுக் காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
அதன்படி, சென்னையில் உள்ள பிரசாத் தியேட்டரில் படம் குழந்கைளுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது. பின்னர் பாலியல் தொந்தரவில் இருந்து தப்பிப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனிதம் பவுண்டேஷன் அமைப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.
படம் முடிந்து வெளியில் வந்ததும், குழந்தைகள் ஒரு படம் பார்த்த மகிழ்சியில் வந்தார்கள். பெற்றவர்கள் கண்ணீருடன் வந்தார்கள். நிகழ்ச்சியில் நாரோ மீடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி நாசர், முதன்மை செயல் இயக்குநர் பிரபாலா சுபாஷ், பேபி சைதன்யா, நடிகர் அஜய், இயக்குநர் மைக்கேல் அருண், தயாரிப்பாளர் ஏஞ்சலின் டாவின்சி உள்ளிட்ட நிசப்தம் படக்குழுவினரும் கலந்துகொண்டனர்.