தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அட்டகத்தி தினேஷ் நாயகனாக நடித்த ஒருநாள்கூத்து படத்தில் நாயகியாக நடித்தவர் நிவேதா பெத்துராஜ். தமிழ்நாட்டு பெண்ணான இவர், அந்த படத்தில் மாடர்ன் கெட்டப்பில் நடித்தார். அதையடுத்து உதயநிதியின் பொதுவாக எம்மனசு தங்கம் படத்தில் கமிட்டானார். ஆனால் இந்த படத்தில் நடிக்க அவர் கதையே கேட்கவில்லையாம். கதாநாயகி வேடம் என்றதும் கண்ணை மூடிக்கொண்டு கமிட்டாகி விட்டாராம்.
அதையடுத்து, படப்பிடிப்புக்கு போனபிறகுதான், செகண்ட் ஆப்பில் தனது கேரக்டர் என்ட்ரியாவது அவருக்கு தெரிந்திருக்கிறது. அதோடு, கதைப்படி அரசியல் தாதா பார்த்திபனின் மகளாக நடித்துள்ள நிவேதா, உதயநிதிக்கான காதல் காட்சிகள் சிறிது நேரம்தான் வருகிறதாம். அதிலும் நிவேதாவுக்கு பர்பாமென்ஸ் பண்ண பெரிய ஸ்கோப் எதுவும் இல்லையாம். இதனால் கதையே கேட்காமல் நடித்த என்னை இப்படி டம்மி பண்ணி விட்டார்களே என்று தனது அபிமானிகளிடம் சொல்லி புலம்பி வருகிறார் நிவேதா.
அதோடு, இது எனக்கு நல்ல பாடம். இனிமேல் எந்த படமாக இருந்தாலும் மொத்த கதையையும் சீன் பை சீன் கேட்காமல் ஒத்துக்கொள்ள மாட்டேன். இரண் டாவது படத்திலேயே நான் சினிமாவை கற்றுக்கொண்டேன் என்று கூறி வருகிறார் நிவேதா பெத்துராஜ்.