பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகர் ரஜினியின் மூத்த மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ், மகளிர் தினமான மார்ச் 8 ம் தேதி ஐ.நா.சபையில் நடக்கும் விழாவில் நடனமாட உள்ளார். அதற்காக கடந்த ஒரு மாத காலமாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள அவர், தினமலர் இணையதளத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டி...
* இந்த நிமிடம் எப்படி உணர்கிறீர்கள்?
உண்மையில் மிகவும் பதற்றமாக உள்ளது. நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் தீவிரமாக நடனத்தில் இறங்கி உள்ளேன். அதிலும் இந்த மாதிரி கவுரவம் நிறைந்த ஒரு மேடையில் நடக்க போகிறது என்பது மிகவும் பெருமையாக உள்ளது. இதற்காக இந்திய தூதருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆண்டு அக்டோபரில் அவரை சந்தித்த போது, இங்கு இந்திய கலாச்சாரத்தை புரோமோட் செய்ய விரும்புகிறேன். இதுவரை ஐநா.,வில் பாடகர்கள், இசைக் கலைஞர்கள் தான் நிகழ்ச்சி நடத்தி உள்ளனர். அதனால் நீங்கள் நடன நிகழ்ச்சி நடத்த வேண்டும் என என்னிடம் கேட்டுக் கொண்டார்.
* எந்த வயதில் நடனம் கற்றுக் கொள்ள துவங்கினீர்கள்?
10 வயதில் நடனம் கற்றுக் கொள்ள துவங்கினேன். இப்போது 17 வருடங்களாக நடனம் ஆடிக் கொண்டிருக்கிறேன்.
* இப்போது குரு வைத்துக் கற்றுக் கொள்கிறீர்களா?
மீனாட்சி சித்தரஞ்ச் தான் அவரின் பெயர். அவரிடம் தான் தொடர்ந்து பயிற்சி எடுத்து வருகிறேன். அவர் தான் இந்த நிகழ்ச்சிக்கும் என்னுடன் வர உள்ளார். இந்த விழாவை பார்ப்பதற்கு அவரையும் அழைத்து செல்கிறேன் என்பது மிகவும் சந்தோஷமான விஷயம். அவரது மாணவி ஐ.நா.,வில் நடனமாடுவது அவருக்கும் பெருமை. எனது நடனத்தை அவர் உட்காந்து பார்ப்பது எனக்கும் பெருமை.
* மகளிருக்கு எதிராக தொடர்ந்து நடக்கும் வன்முறைகள் பற்றி...
பெண்களுக்கு போராட்டம் என்பது இருக்கும். ஆனால் முன்பு இருந்ததை விட இப்போது அவை குறைந்துள்ளது. பெண்கள் முன் போன்று நினைத்ததை சொல்ல பயப்படவில்லை. கஷ்டமோ, அநியாயமோ எதுவாக இருந்தாலும் இப்போது பெண்கள் அதனை வெளிப்படையாக பேசுகிறார்கள். நாம் வெளியில் சொன்னால் இதற்கு தீர்வு கிடைக்கும் என புரிந்து கொண்டுள்ளனர். பேச பயப்படும் நிலை இப்போது இல்லை. இது நல்ல விஷயம். இது தான் பெண்கள் முன்னேற்றத்திற்கான முதல்படியாகும்.
* இந்த நிகழ்ச்சியில் குறிப்பிட்ட பாடல் அல்லது கருத்தை மையப்படுத்தி செய்கிறீர்களா?
அப்படி எதுவும் இல்லை. சர்வதேச மகளிர் தினத்தன்று நடக்கும் நிகழ்ச்சி என்பதால் முற்றிலும் பெண்கள் சார்ந்தது. முதலில் புஷ்பாஞ்சலி செய்கிறேன். அதன் பிறகு நடராஜர் ஆராதனை செய்கிறேன். தொடர்ந்து வர்ணம் செய்கிறேன். அது மீனாட்சி அம்மனின் ஆட்சி திறனை போற்றும் விதத்திலானது. அடுத்தாக அவசர தாலாட்டை மையமாக கொண்ட பதம் பண்ணுகிறேன். வேலைக்கு செல்லும் பெண்கள் குடும்பத்தையும், குழந்தைகளையும் எவ்வாறு பார்த்துக் கொள்கிறார்கள் என எனது குருவிற்கு கவிஞர் வைரமுத்து எழுதிய பாடலை மையமாக கொண்டது. அதன் பிறகு பாலமுரளி கிருஷ்ணாவின் தில்லானா. பிறகு உலக அமைதிக்காக எம்.எஸ்.சுப்புலட்சுமி ஐ.நா., சபையில் பாடிய மைத்ரின்பஜத் வைத்து முடிக்கிறேன்.
* உங்களின் நிகழ்ச்சி எத்தனை மணிநேரம் நடக்க உள்ளது?
ஒரு மணிநேரம் தொடர்ச்சியாக நடக்கிறது.
* இந்த நிகழ்ச்சி எங்கு நடக்க உள்ளது? எத்தனை பேர் கலந்து கொள்ள உள்ளனர்?
ஐநா., சபையில் மொத்தம் 190 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் அனைவரையும் அழைத்துள்ளோம். இது தவிர ஐ.நா.,வில் பணியாற்றும் இந்தியர்கள், பொதுச் செயலாளருக்கு அடுத்த நிலையில் உள்ள அதிகாரிகள் பலர் கலந்து கொள்ள உள்ளனர். பெண்களுக்கான ஐநா அமைப்பில் நல்லெண்ண தூதராக 2016 ம் ஆண்டு நியமிக்கப்பட்டுள்ளதால், அவர்களும் கலந்து கொள்ள உள்ளனர். அமெரிக்க தமிழ்ச்சங்கமும் இவ்விழாவை இணைந்து நடத்துகிறது.
இதைத் தொடர்ந்து அமெரிக்க தமிழ்ச்சங்கத்தில் அடுத்த வாரம் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அமெரிக்க தமிழ்சங்கத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற நீதிபதி. இவரும் பரதநாட்டிய கலைஞர். இவர் கலந்து கொண்டு விருது வழங்க உள்ளார். ஐநா., சபையில் நடனமாடிய முதல் இந்திய பெண் என்பதால் அதனை பாராட்டி, அவர் விருது வழங்க உள்ளார்.
* குடும்பத்தை பார்த்துக் கொண்டு, நடன பயிற்சிக்கும் எவ்வாறு நேரம் ஒதுக்குகிறீர்கள்?
பயிற்சிக்கு நிறைய நேரம் ஒதுக்க வேண்டியதாக தான் இருந்தது. காலை, மாலை இரண்டு நேரமும் பயிற்சி செய்ய வேண்டும். இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், பசங்க வளர்ந்து விட்டார்கள். அவர்கள் பள்ளி முடித்து வந்த பிறகும் விளையாட்டு, இசை என பல்வேறு வகுப்புக்களுக்கு போக வேண்டும் என்பதால், நானும் அந்த சமயத்தில் பயிற்சியை முடித்து விட்டு, வந்து விடுவேன். அத்துடன் தனுஷ் மிகவும் ஊக்கப்படுத்தினார். அந்த மாதிரியான சப்போர்ட் இருப்பதால் தான் பெண்களால் தங்களின் கனவுகளை அடைய முடிகிறது. பெண்கள் பல விஷயங்களை சாதிப்பதற்கு குடும்பத்தின் ஆதரவு மிக அவசியம்.
* ஐ.நா.,வில் நீங்கள் நடனம் ஆட உள்ளது பற்றி அப்பா என்ன கூறினார்?
அவருக்கு மிகவும் பெருமை. மொத்த குடும்பமும் இதற்காக பெருமைப்படுகிறது. இது மிகவும் பெருமைக்குரிய தருணம். எல்லோரும் பிஸியாக இருப்பதால் அவர்களால் வர முடியவில்லை.
* உங்களுடன் யார் வருகிறார்கள்?
எனது நடன ஆசிரியை மட்டும் என்னுடன் வருகிறார்.
* பெண்கள் பற்றி ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா? இதுவரை சாதித்தவர்கள் பற்றி, இந்தியாவில் வளரக் கூடியவர்களுக்கு...
சாதிப்பது என்பது வெளியில் போய் தான் சாதிக்க வேண்டும் என்பது இல்லை. வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் தங்களின் குழந்தைகளை வளர்ப்பதில், பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என கற்றுத் தருவதே சாதனை தான். மனைவியோ, பார்ட்னரோ, வேலை செய்யும் இடத்தில் இருக்கும் பெண்களையோ எப்படி மதிக்க வேண்டும் என கற்று தர வேண்டும். சிறு வயதில் இருந்தே இதனை கற்றுத் தர வேண்டும்.
இது ஒருவர் மட்டும் செய்யும் வேலை இல்லை. ஒவ்வொரு வீட்டில் இருக்கும் பெண்களும் சேர்ந்து செய்ய வேண்டியது. பெண்களிடம், சமுதாயத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என கற்றுத் தர வேண்டும். பெண் என்பவள் நமக்கு சமமானவள். அவள் குறைவானளோ அல்லது நாம் பெரியவர்களோ இல்லை என சிறு வயதிலிருந்தே கற்றுத் தர வேண்டும்.
* எதிர்காலத்திலும் இது போன்ற பல நடன நிகழ்ச்சிகளை உங்களிடம் எதிர்பார்க்கலாமா?
கண்டிப்பாக இதற்கு பிறகும் தொடர்ந்து நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்பேன். கவுரவமான மேடைகள் கிடைத்தால் தொடர்ந்து பங்கேற்பேன்.
* மாரியப்பன் படம் பற்றி...
பிரிபுரோடெக்ஷன் போய் கொண்டிருக்கிறது. அனேகமாக ஜூன் அல்லது ஜூலையில் அந்த வேலையை துவக்குவேன்.
* மாரியப்பனில் யார் நடிக்க போகிறார்கள்?
அது இன்னும் முடிவு செய்யவில்லை.