டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐ.பி.கார்த்திகேயன் மற்றும் ஸ்பைசி கூல் இம்பரெஷன்ஸ் சார்பில் திலீபன், எம்.செங்கோட்டையன் இணைந்து தயாரித்துள்ள படம் களவு. கலையரசன், கருணாகரன், பாண்டியராஜன், சின்னி ஜெயந்த், மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளார்கள். அபிராமி ஐயர் என்ற புதுமுகம் ஹீரோயின். விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுந்தரமூர்த்தி இசை அமைத்துள்ளார். படம் பற்றி இயக்குனர் முரளி கார்த்திக் கூறியதாவது:
கிரைம் - திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் படம். எதிர்பாராத சம்பவங்களால் மூன்று இளைஞர்கள் மற்றும் ஒரு தம்பதிகளின் வாழ்க்கை மாறுகின்றது. இது தான் படத்தின் ஒரு வரி கதை. நம் சமுதாயத்தில் நடைபெறும் உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் படம், முழு படமும் சென்னையில் படமாக்கப்பட்டிருக்கிறது.
தன்னுடைய நண்பர்களோடு இருக்கும் போது குதூகலமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும் ஐடி ஊழியர் கலையரசன், தன்னுடைய வீட்டிற்கு சென்றவுடன் முழுவதுமாக மாறி விடுகிறார். இவரது வாழ்க்கையை மையமாக கொண்டு தான் படத்தின் கதை நகருகின்றது. இரவு பணிகளில் வேலை பார்க்கும் ஒரு பிபிஓ நிறுவன ஊழியராக கருணாகரன் நடித்துள்ளார். அவருடைய நடவடிக்கைகள் வித்தியாசமாக காணப்பட்டாலும், அதற்கு ஆழமான அர்த்தங்கள் இருக்கும். 22 நாட்களில் படத்தை முடித்து விட்டோம். மே மாதம் வெளிவருகிறது. என்றார் முரளி கார்த்திக்.