ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிச்சைக்காரன் படத்திற்கு பிறகு கமர்சியல் வட்டத்திற்குள் வந்து விட்டார் விஜய் ஆண்டனி. பல முன்னணி ஹீரோக்களின் படங்கள் வியாபாரமாகாமல் தடுமாறி வரும் நிலையில், இவர் நடித்த படங்கள் தமிழ், தெலுங்கிற்கு உடனடியாக விற்பனையாகி விடுகிறது. அதோடு, கதைகளை நன்றாக செலக்ட் பண்ணி நடிக்கிறார். தனக்கு எது செட்டாகும் என்பதை புரிந்து கொண்டவராக இருக்கிறார் என்றெல்லாம் விஜய் ஆண்டனியைப்பற்றி திரையுலகினர் கருத்து கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஜீவா சங்கர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த எமன் படம் திரைக்கு வந்தது. அன்று மாலை பத்திரிகையாளர் காட்சி திரையிடப்பட்டது. அப்போது காட்சி முடிந்து பத்திரிகையாளர்கள் தியேட்டரை விட்டு வெளியேறும் நேரத்தில் தனது மனைவியுடன் அங்கே வருகை புரிந்தார் விஜய் ஆண்டனி. அப்போது ஒவ்வொரு பத்திரிகையாளர்களையும் ஓடிஓடிச்சென்று நிறுத்தி, எமன் படம் குறித்து கருத்து கேட்டார். அதோடு தான் தாமதமாக வந்ததற்கும் பணிவுடன் ஸாரியும் கேட்டுக்கொண்டார் விஜய் ஆண்டனி.