டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் சினிமாவின் கருப்பு வெள்ளை சூப்பர் ஸ்டார் பி.யூ.சின்னப்பா, தமிழ் சினிமாவின் முதல் ஆக்ஷன் ஹீரோ. புதுக்கோட்டையில் பிறந்து நாடகத்தில் நடித்து, சினிமாவுக்கு வந்தவர். படங்களாக நடித்து குவித்து அதன் மூலம் வந்த பணத்தை வீணாக செலவு செய்யாமல் புதுக்கோட்டையில் வீடுகளாக வாங்கி குவித்தார். தெருவுக்கு ஒரு வீடு வாங்கியதாக சொல்வார்கள். சின்னப்பாவின் அசுர வளர்ச்சியை கண்ட புதுக்கோட்டை சமஸ்தானம், இனி பி.யூ.சின்னப்பா புதுக்கோட்டையில் சொத்துக்கள் வாங்க கூடாது என்ற தடை உத்தரவு போட்டது.
அதன் பிறகு சென்னையில் சொத்துக்களாக வாங்கி குவித்தார். குடிபழக்கத்துக்கு அடிமையாகி இருந்த சின்னப்பா அதன் காரணமாக தனது 35வது வயதில் திடீரென இறந்தார். சொத்துக்களை வாங்கி குவித்த சின்னப்பா அதற்கான டாக்குமெண்டுகளை சரியாக வைக்கவில்லை. அவர் வாங்கிய சொத்து விபரங்களும் யாருக்கும் தெரியாது. இதனால் பலரும் சொத்துக்களை அபகரித்து கொண்டனர். அவரது மனைவி சகுந்தலாவுக்கும், மகன் ராஜாபகதூருக்கும் மிஞ்சியது சென்னை திருவல்லிக்கேனியில் பல வீடுகளை கொண்ட ஒரு அப்பார்ட்மெண்ட் மட்டும்தான்.
சின்னப்பாவின் மரணத்துக்கு பிறகு வேறு வருமானம் இல்லாததால் அப்பார்ட்மெண்டில் உள்ள ஒவ்வொரு வீடாக விற்று அதை வைத்து வாழ்ந்தார்கள். ஒரு சில படங்களில் நடித்த மகன் ராஜா பகதூர் அப்பாவை போல குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இறந்து போனார். எல்லா வீடுகளையும் விற்று விட்டு வாடகை வீட்டில் இருந்த மனைவி சகுந்தலா அங்கேயே இறந்தார். புதுக்கோட்டையில் உள்ள சின்னப்பா சமாதியும், வாடகை வீட்டிலிருந்த ஒரே புகைப்படமும்தான் சின்னப்பா குடும்பத்தின் இப்போதைய சொத்து.