ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கும் துப்பறிவாளன் படத்தின் படப்பிடிப்பு சிதம்பரத்தை அடுத்த பிச்சாவரத்தில் நடந்து வருகிறது. அங்குள்ள மான்குரோவ் காடுகளில் விஷால், பிரசன்னா, ஆண்ட்ரியா பங்கேற்கும் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் சிவராத்திரியை ஒட்டி படக்குழுவினர் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சிறப்பு தரிசனம் செய்ய சென்றனர். கோவிலில் விஷால், பிரசன்னா, ஆண்ட்ரியா ஆகியோருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விஷாலும், ஆண்ட்ரியாவும் கையில் மாலையுடன் கோவிலை சுற்றி வந்தனர். இதை பார்த்த மக்கள் இருவரும் கோவிலில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக அவர்கள் இருவரையும் மொபைல்போனில் படம் எடுத்து அதனை இணைய தளத்தில் பரப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் உள்ள சினிமா பத்திரிகையாளர்கள் சிதம்பரம் நிருபர்களுடன் தொடர்பு கொண்டு பேசினார். அவர்கள் நவராத்திரி வழிபாட்டுக்கு வந்துள்ளனர். முக்கிய பிரமுகர்களுக்கு கோவில் மாலை அணிவிக்கப்படுவது வழக்கம் என்று விளக்கம் அளித்தனர். நடிகை ஆண்ட்ரியா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ஆங்கிலோ இண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது.