விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
நடிகர் கமலஹாசன் சமீப காலமாக தனது டுவிட்டர் பக்கத்தில் சமூக பிரச்னைகள், அரசியல் சூழ்நிலைகள் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தற்போது நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பது தொடர்பான திட்டத்திற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் இது தொடர்பாக தனது டூவிட்டர் பக்கத்தில் அவரது பாணியில் கருத்து தெரிவித்துள்ளார்.
இதைப்பற்றி கமல் கூறியதாவது ......" பூமியின் இயற்கை வளத்தையும் ஏழையர் வாழ்வாதாரத்தையும் குலைக்கும் எந்தத் திட்டமும் தற்போது பெருவருமானம் தரினும் பின்னர் பெருநஷ்டமாகும்.இயற்கை மற்றும் ஏழைகளின் வாழ்வாதாரத்தை அழித்து துவங்கும் எந்த நிறுவனத்தின் வெற்றியும் ஒரு மோசமான திட்டம் தான். தமிழ்நாடு விழத்து கொள்ள வேண்டும்இயற்கை நமக்கான தேவைகளை பூர்த்தி செய்யும், தனி மனிதர்களின் பேராசையை அல்ல - காந்தி தமிழ்நாட்டு மாணவர்கள் அமைதியான வழியில் செல்ல வேண்டும், நீங்கள் தமிழக மக்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும் குரல் எழுப்புங்கள், உங்கள் பெரியவர்கள் உங்களை சமமாக மதிப்பதை உணருங்கள், சபாஷ் சபாஷ்! புதுச்சேரி முதல்வர் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தெளிவான நிலைபாடு எடுத்துள்ளதற்கு எனது சல்யூட் " என்று கூறியுள்ளார்.