டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
'அஞ்சான்' படத்தின் மாபெரும் தோல்விக்குப் பிறகு ஒரு இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் எழ முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் லிங்குசாமி. கடும் நெருக்கடியில் இருந்த அவரை விஷால் 'சண்டக்கோழி 2' செய்யலாம் என கை கொடுத்து தூக்க முன்வந்தார். அதற்குள், தெலுங்கு ஹீரோக்களுக்கு லிங்குசாமி கதை சொல்லப் போனதால் லிங்குசாமியுடன் இணையும் திட்டத்தைக் கைவிட்டார். ஆனால், தெலுங்கு ஹீரோக்கள் லிங்குசாமியைக் கைவிட்டதால் மீண்டும் விஷால் பக்கமே வந்தார். சில பல பேச்சுக்களுக்குப் பிறகு 'சண்டக்கோழி 2' படத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்தனர்.
அதற்குள், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தமிழில் நடிக்க வரும் படத்தை லிங்குசாமி இயக்கப் போவதாக அறிவித்தார்கள். ஆனால், அல்லு அர்ஜுன் அடுத்து வேறு ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்ததால் லிங்குசாமியுடன் தமிழுக்கு வருவாரா என்ற சந்தேகம் இருந்தது. அந்த சந்தேகத்தை தற்போது லிங்குசாமியே தெளிவுபடுத்தியுள்ளார்.
'சண்டக்கோழி 2' படம் விரைவில் ஆரம்பமாக உள்ளது. அந்தப் படம் முடிந்ததும் உடனடியாக அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் என தெரிவித்துள்ளார். திரும்ப எந்த சர்ச்சையும் வராமல் பார்த்துக் கொள்வாரா ?.