இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பருத்திவீரன் படம் ரிலீசாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக நடிகர் கார்த்தி, தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர்,
"10 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் பருத்திவீரன் படம் ரிலீசானது. அன்றிலிருந்து இன்று வரை உங்களின் அன்பு என்னுடன் உள்ளது. நான் பல ஏற்றங்களையும், இறக்கங்களை பார்த்துள்ளேன். ஆனால் அப்போதெல்லாம், உங்களின் அன்பு என்னுடனேயே உள்ளது. அந்த அன்பு தான் என் வாழ்க்கையை அழகாக ஆக்கி உள்ளது. அந்த அன்புக்கு நான் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன். அதற்காக தொடர்ந்து நான் முழு முயற்சி செய்வேன். உங்களின் அன்புக்கு நன்றி.
கடவுள், குடும்பம், அண்ணா, என் டைரக்டர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், சக நடிகர்கள், மீடியா நண்பர்கள், பாண்டியன் மாஸ்டர், தியேட்டர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் எனது அருமை ரசிகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி".