'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பெப்சி எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவராக இயக்குநர் ஆர்கே செல்வமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் 23 சங்கங்கள் உள்ளடக்கியுள்ளது. இதில் ஆர்கே செல்வமணி தலைமையில் ஒரு அணியினரும், எஸ்.ஏ.ராஜ்குமார் தலைமையில் ஒரு அணியினரும் களமிறங்கினர். இதற்கு இன்று தேர்தல் நடந்தது. 23 சங்கங்களை சேர்ந்தவர்கள் ஓட்டு போட்டனர்.
இந்நிலையில் தேர்தல் முடிவுகள் மாலை வெளியிடப்பட்டன. இதில் தலைவராக செல்வமணி தேர்வு செய்யப்பட்டார். செயலாளராக சண்முகமும், பொருளாளராக சுவாமிநாதனும், துணை தலைவர்களாக 5 பேரும், இணைச் செயலாளர்களாக 5 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.