ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
இயக்குனர் அமீரிடம் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிவர் முத்து கோபால். இவர் தற்போது தானே சொந்தமாக ஒரு படத்தை தயாரித்து அதில் நடிக்கவும் செய்திருக்கிறார். இந்தப் படத்தில் முத்து கோபால் ஜோடியாக சாந்தினி நடித்துள்ளார். ஜெயபிரகாஷ், அருள்தாஸ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.
இது திருப்பூரில் உள்ள சாயப் பட்டறை கழிவுகள் அமராவதி ஆற்றில் கலந்து அதன் மூலம் அமராவதி ஆற்று பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் அடைந்துள்ள பாதிப்புகள், திருப்பூர், பொள்ளாச்சி, பகுதி மக்கள் எந்த அளவிற்கு சாயக் கழிவுளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை பற்றிய கதை. படத்தை சொந்தமாக தயாரித்த முத்து கோபாலுக்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்படவே மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாமல் தனது குரு அமீரிடம் வந்துள்ளார். 70 சதவிகித படப்பிடிப்பு முடிந்திருந்த படத்தை அமீர் போட்டுப் பார்த்தார்.
சமூக அக்கறை கொண்ட படமாகவும் அதே நேரத்தில் ஒரு நல்ல பொழுதுபோக்கு சினிமாகாவும் படம் உருவாகி இருப்பதை அறிந்தார். அதனால் தன் சிஷ்யன் படத்தை தானே வாங்க முடிவு செய்தார். படத்திற்கு முத்து கோபால் வைத்திருந்த பெயரை மாற்றி கே.பாலச்சந்திரின் குடும்பத்தினர் அனுமதி வாங்கி அச்சமில்லை அச்சமில்லை என்ற பெயர் சூட்டினார். தனே சிறப்பு தோற்றத்திலும் நடித்தார்.
"இனி சமூக பிரச்சினைகளை பேசும் படங்களில்தான் நடிப்பது, தயாரிப்பது, இயக்குவது என்ற முடிவு செய்துள்ளேன். முத்து கோபாலின் படத்தை பார்த்ததும் அதன் சமூக நோக்கம் பிடித்த்திருந்தது. அதனால் நானே தயாரிப்பாளராகிவிட்டேன்" எனகிறார் அமீர்.