இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தமிழில் கணிதன், கதகளி போன்ற படங்களில் நாயகியாக நடித்த கேத்ரின் தெரஸாவிற்கு படவாய்ப்புகள் இல்லாததால் வில்லி வேடத்தில் நடித்து வருகின்றார். தெலுங்கு படங்களில் நாயகியாக அறிமுகமான கேத்ரினுக்கு போதிய வரவேற்பு இல்லாததால் கிடைக்கும் வேடங்களில் நடித்து வருகின்றார். ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜூன் நடித்த சரைய்னோடு படத்தில் அரசியல்வாதியாக நடித்த கேத்ரின் மீண்டும் அரசியல்வாதியாக ராணாவின் நேனே ராஜா நேனே மந்திரி படத்தில் நடித்து வருகின்றார். அதிலும் வில்லியான அரசியல்வாதியாக கேத்ரின் நடிக்கின்றாராம். இக்கதாபாத்திரம் குறித்து இயக்குனர் கூறியபோது மறுப்பேதும் கூறாமல் கேத்ரின் இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தாராம். இயக்குனர் தேஜா இயக்கும் நேனே ராஜா நேனே மந்திரி படத்தில் ராணாவிற்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகின்றார்.