கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
தன்னுடைய நண்பர் பெயரில் '24 ஏஎம் ஸ்டுடியோஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் படத்தில் நடித்து வருகிறார். 'வேலைக்காரன்' படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். மலையாள ஹீரோ ஃபஹத் ஃபாசில் இன்னொரு ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சினேகா நடித்து வருகிறார். அதாவது சினேகாவுக்கு சிவகார்த்திகேயனுக்கு அக்கா வேடம் என்ற தகவல் அடிபடுகிறது. ரோகிணி, தம்பி ராமையா, சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி உள்பட பலர் நடிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ஆகஸ்ட் 25ஆம் தேதி இப்படத்தை வெளியிட உள்ளனர்.
இந்நிலையில், 'வேலைக்காரன்' படத்திற்குப் பிறகு பொன்ராம், ரவிகுமார் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ள சிவகார்த்திகேயன் 'இறுதிச்சுற்று' இயக்குனர் சுதா கொங்கராவிடம் அண்மையில் கதை கேட்டிருக்கிறார். சுதா சொன்ன கதை சிவகார்த்திகேயனுக்கு பிடித்துவிட்டதாம். உடனடியாய் சுதாவை அனுப்பி ஏ.எம். ரத்னத்திடம் கதை சொல்ல வைத்திருக்கிறார். சுதா - சிவகார்த்திகேயன் இணையும் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்க உள்ளார். இந்தப் படத்தில் நடிக்க சிவகார்த்திகேயனுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு பல கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.