சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
மாவீரன் கிட்டு படத்தை அடுத்து தற்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கி வருகிறார் சுசீந்திரன். அதில் ஒரு படம் அறம் செய்து பழகு. இந்த படத்தில் விக்ராந்த், தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் இணைந்து நடித்து வருகின்றனர். தெலுங்கு நடிகை மெஹ்ரின் பிர்ஷதா நாயகியாக நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகிறது. அறம் செய்து பழகு படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்று இறுதிகட்ட பணிகள் நடக்கிறது.
இந்த நிலையில், சுசீந்திரன் இயக்கத்தில் இன்னொரு படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பும் நடந்துள்ளது. அப்படத்தில் நான்கு இளைஞர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அந்த படம் குறித்து விசாரித்தபோது, ஏற்கனவே கார்த்தியை வைத்து தான் இயக்கிய நான் மகான் அல்ல படத்தின் இரண்டாம் பாகமாக இப்படத்தை இயக்குகிறாரம் சுசீந்திரன். இன்றைய இளைஞர்கள் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சினை அடிப்படையில் இப்படம் உருவாகிறதாம்.