கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
இந்திய அளவில் அதிக தொகையை வசூல் செய்த தென்னிந்திய சினிமா 'பாகுபலி' படம்தான். பாகுபலி படத்தின் முதல் பாகத்தின் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து அதன் 2 ஆம் பாகத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி. பரபரப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் முடிவடைந்தது.
தற்போது பாகுபலி படத்தின் முக்கிய பணியான கிராபிக்ஸ் பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகின்றன. இன்னொரு பக்கம் எடிட்டிங்,ட ப்பிங் போன்ற போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நடைபெற்று வருகின்றன. தற்போதைய சூழலில் பாகுபலி-2 படத்தை ஏப்ரல் 28ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். முதல் பாகத்தின் வெளியீட்டு தேதியில் குழப்பம் ஏற்பட்டதைப்போல் இந்தமுறை ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள்.
இந்நிலையில், ராஜமௌலி அடுத்ததாக இயக்கும் படம் எது? அதன் கதாநாயகர்கள் யார் யார்? என இப்போதே ஆளாளுக்கு தகவல் சொல்லத் துவங்கிவிட்டனர். உண்மை நிலவரம் என்ன? அடுத்த புராஜெக்ட் பற்றி இரண்டு திட்டங்கள் வைத்திருக்கிறாராம் ராஜமௌலி.
ஒன்று, மகாபாரதம் கதையை பிரம்மாண்டமான திரைப்படமாக எடுப்பது. இப்படத்தில் மோகன்லால், அமீர்கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட இந்திய சூப்பர்ஸ்டார்கள் அனைவரையும் ஒன்றிணைத்து நடிக்க வைப்பது என்று திட்டமிட்டிருக்கிறாராம்.