பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கயல் ஆனந்தி நடிக்கும் புதிய படத்திற்கு என் ஆளோட செருப்பக் காணோம் என்ற டைட்டில் வைத்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் இந்த அளவிற்க டைட்டில் பஞ்சம் நிலவும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். விஜய் நடித்த புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை படங்களை இயக்கிய ஜெகன்நாத் இயக்குகிறார். இவர் தற்போது படங்களில் நடித்தும் வருகிறார்.
புதுமுக நடிகருடன் கயல் ஆனந்தி நடிக்கிறார். இவர்கள் தவிர ரேகா, கே.எஸ்.ரவிகுமார், யோகிபாபு, பால சரவணன், லிவிங்ஸ்டன். ஜெயபிரகாஷ், சிங்கம்புலி, தளபதி தினேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். சுக.செல்வன் ஒளிப்பதிவு செய்கிறார். இஷான் தேவ் இசை அமைக்கிறார். எஸ்.சக்திவேல் தயாரிக்கிறார்.
"ஹீரோயின் ஆனந்தி தன் ஒரு ஜோடி செருப்புகளை தொலைத்து விடுகிறார். ஒரு அடை மழை காலத்தில் அது தொலைந்து விடுகிறது. அந்த செருப்பு மிகவும் விலை குறைவானதுதான். ஆனால் ஒரு வகையில் அது அவளுக்கு மிக முக்கியமானது. காதலி தொலைத்த செருப்பைத் தேடி காதலன் குடையுடன் செல்கிறான். செருப்பு கிடைத்ததுதா? காதல் கைகூடியதா? அந்த செருப்பில் அப்படி என்னதான் சிறப்பு என்பது பற்றிய கதை. 30 நாளில் நடக்கிற கதை. மனிதன் உடலோடு ஒட்டிய செருப்பு மனிதனோடு எந்த அளவிற்கு பின்னி பிணைந்திருக்கிறது என்பதை சுவாரஸ்யத்தோடு சொல்கிறேன்" என்கிறார் இயக்குனர் ஜெகன்நாத்.