ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் |
சுந்தரபாண்டியன் வெற்றிப் படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் அதன் பிறகு இது கதிர்வேலன் காதல் என்ற படத்தை இயக்கினார். அது தோல்வி படமானது. சில வருட இடைவெளிக்கு பிறகு தற்போது சத்ரியன் படத்தை இயக்கி உள்ளார். விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன், சரத் லோகித்தாஸ், ஐஸ்வர்யா தத்தா உள்பட பலர் நடித்துள்ளனர். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். சத்ரியன் படம் தாமதமானது ஏன் என்பதற்கு எஸ்.ஆர்.பிரபாகரன் அளித்துள்ள விளக்கம் வருமாறு:
இது கதிர்வேலன் காதல் படத்தை முடித்ததும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனத்துக்கு சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து ஒரு படம் பண்ண கமிட் ஆனேன். ரஜினிமுருகன் படம் ஆரம்பிக்கவே தாமதமானது. எனவே நாங்களும் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது. இனிமேலும் தாமதித்தால் சரிவராது என்று சத்யஜோதி பிலிம்ஸில் இருந்து வந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டேன்.
சத்யஜோதிகிட்ட விக்ரம்பிரபு கால்ஷீட் இருந்தது. விக்ரம்பிரபு வாகா, வீரசிவாஜி இரண்டு படங்களில் பிஸியா இருந்தார் நான் அவருக்கு சொன்ன கதைக்கு கெட்அப் மாற வேண்டியிருந்ததால அந்த இரண்டு படங்கள் முடித்துவிட்டுதான் வர வேண்டியதாகிவிட்டது. லேட்டானாலும் கூட நான் நினைச்ச ஒரு படத்தை எடுத்துள்ளேன் என்கிற திருப்தியை சத்ரியன் கொடுத்துருக்கிறது. இந்த தாமதம் சினிமாவில் சகஜம் தானே?
நிறைய கேங்ஸ்டர் படங்கள் வந்திருக்கிறது. உதயம்,அமரன் போன்ற நிறைய கேங்ஸ்டர் படங்கள் இங்கு பதிவாகியிருக்கிறது. ஆனால் இந்த படங்கள் ஒரு சினிமாவாகத்தான் காட்சிபடுத்திருப்பாங்க அமரன்ல கொஞ்சம் இயல்பு வாழ்க்கையை பதிவு பண்ண முயற்ச்சி பண்ணினாங்க, நான் ஒரு கேங்ஸ்டரை சினிமாவாக இல்லாமல், அவங்களுக்கு நெருக்கமா நின்னு ஒரு வாழ்க்கையாக அழுத்தமாக பதிவு பண்ணியிருக்கேன்.
இந்த சத்ரியன் படத்துல சினிமா தனமான கேங்ஸ்டர் எந்த பிரேம்லயும் பாக்கமாட்டீங்க. ஒரு கேங்ஸ்டர் வாழ்க்கையில் என்னென்ன நடக்கும் அதை எப்படி எதிர் கொள்வார்கள் என்பது தான் படத்தில் இருக்கும். எந்த பிரேம்லயும் ஹீரோ தெரிய மாட்டார். குணா என்கிற இளைஞன் தான் தெரிவார். நம்ம ஊரோட தன்மை, கலாச்சாரம், பழக்கவழக்கம், வாழ்வியல தான் பதிவு பண்ணியிருக்கேன் என்கிறார் எஸ்.ஆர்.பிரபாகரன்.