சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
'நெடுஞ்சாலை' ஷிவதா என இதுவரை அழைக்கப்பட்டு வந்தவர் இனிமேல் 'அதே கண்கள்' ஷிவதா என அழைக்கப்படும் அளவிற்கு 'அதே கண்கள்' படத்தில் சிறப்பாக நடித்துள்ளதற்காக ஷிவதாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. பொதுவாக ஓரிரு படங்களில் மட்டும் நடித்துள்ள வளரும் நடிகைகள் நெகட்டிவ்வான கதாபாத்திரத்தில் அவ்வளவு சீக்கிரத்தில் நடிக்க சம்மதிக்க மாட்டார்கள்.
தமிழில் இதற்கு முன் இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ள ஷிவதா 'அதே கண்கள்' படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் அவர்தான் வில்லியே. இருந்தாலும் படம் ஷிவதாவைப் பற்றி அதிகம் பேச வைத்துள்ளதால் அவர் மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறாராம்.
“ரொம்ப சந்தோஷமா இருக்கு. எங்களோட 'அதே கண்கள்' படத்துக்கு பாசிட்டிவ்வா நல்ல விமர்சனங்களும், வரவேற்பும் வந்துட்டிருக்கு. நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இப்படி ஒரு நல்ல வாய்ப்பை எனக்குக் கொடுத்த தயாரிப்பாளர் சி.வி.குமார் சார், இயக்குனர் ரோகின் வெங்கடேசன் ஆகியோருக்கு நன்றி.
அதோட என் கூட நடிச்ச கலையரசன், ஜனனி ஐயர், பாலசரவணன், லிங்கா ஆகியோருக்கும் நன்றி. ரசிகர்கள் எல்லாரும் அனுப்பிட்டிருக்கிற ஒவ்வொரு மெசேஜையும் படிச்சிக்கிட்டிருக்கேன். இன்னும் படம் பார்க்காதவங்க படத்தைப் பார்த்து எங்க டீமுக்கு ஆதரவு கொடுங்க,” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.