தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ்நாட்டு மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் குடும்பத்தினர் என ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமே இணைந்து தங்களது கலாச்சாரத்தைக் காப்பாற்ற நடத்தி முடித்த போராட்டம் உலகம் முழுவதும் பலரையும் யோசிக்க வைத்துள்ளது. 'ஜல்லிக்கட்டு' என்பதுதான் அனைவரையும் இணைத்த ஒரு விவகாரம். ஆனால், அதற்குள் பல விஷயங்கள் இணைந்திருக்கின்றன. நமது நாட்டு மாடுகளை அழித்து வெளிநாட்டு மாடுகளை இங்கு வளர்க்க நிர்ப்பந்திக்கும் ஒரு செயலும் அடங்கியுள்ளது. நாட்டு மாடுகள் இனம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சத்துமிக்க நாட்டு மாடுகளின் பாலை நாம் அருந்தாமல், சத்தே இல்லாத வெளிநாட்டு மாடுகளின் மூலம் கிடைக்கும் பாலைத்தான் அருந்திக் கொண்டு வருகிறோம்.
சினிமா நடிகர்கள் தங்களது போராட்டத்தால் வெளிச்சம் பெற்றுவிடக் கூடாது என போராட்டக்காரர்கள் நினைத்தாலும் அதையும் மீறி உதவி செய்கிறேன் எனச் சொல்லி சிலர் தங்களது இமேஜை வளர்த்துக் கொள்ள அதிலும் சில அரசியல் செய்த வேலைகளும் நடைபெற்றது. அப்படிப்பட்ட நடிகர்களை இளைஞர்கள் சரியான விதத்தில் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என பலரும் தற்போது சமூக வலைத்தளங்களில் குரல் கொடுத்து வருகிறார்கள்.
தாங்களும் போராட்டத்திற்கு ஆதரவு தருகிறோம் என்று சொல்லி பல வேலைகளில் இறங்கியுள்ளதாக குற்றச்சாட்டு இப்போது எழுந்துள்ளது. அப்படிப்பட்ட நடிகர்களின் படங்களின் வியாபாரம், படம் வெளியான அன்றே தங்களுக்கென தனி வசூல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் சிலர் அந்த வேலைகளைச் செய்து வருகிறார்கள்.
இத்தனை நாட்களாக தல ரசிகர்கள், தளபதி ரசிகர்கள், சூப்பர்ஸ்டார் ரசிகர்கள், உலக நாயகன் ரசிகர்கள் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு முதல் நாள் முதல் காட்சியிலேயே அவர்களது படங்களை 500, 1000, 2000 என அதிக விலைக்கு டிக்கெட்டுகளை வாங்கிப் படம் பார்ப்பதும், அவர்களது கட்-அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்தும் என பல இளைஞர்கள் தீவிர ரசிகர்களாக இருந்து வந்தார்கள். கட்-அவுட்டுகளுக்கு ஊற்றிய பாலை ஏழை மக்களுக்கும், அனாதை ஆசிரமங்களுக்கும் தரலாமே என பல காலமாக சமூக ஆர்வலர்கள் குரல் எழுப்பி வருகிறார்கள். இனியும், அப்படி கட்-அவுட்டுக்குப் பால் ஊற்றுவதை விட்டு விட்டு எந்த மாட்டு இனத்திற்காகப் போராடினார்களோ அந்த மாடு தரும் பாலை சரியான விதத்தில் பயன்படுத்துங்கள் இளைஞர்களே என்ற குரல் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது.
சில லட்சங்கள் சமூக சேவைக்கென செலவு செய்துவிட்டு, போராட்டக்காரர்களுக்கு ஒரு சில லட்சங்களை உதவி செய்துவிட்டு, பல கோடி கொடுத்தாலும் கிடைக்காத விளம்பரத்தைத் தேடிக் கொள்வதையும், எதிர்காலத்தில் தங்களது டிரஸ்ட்டுகளுக்கு இன்னும் அதிக பணம் கிடைக்க வழி செய்யும் வித்தைகளையும் அவர்கள் செய்து வருகிறார்கள்.
விவசாயிகளுக்காகத்தான் நீங்கள் போராடினீர்கள் என்பது உண்மையென்றால், கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களை தலை மீது தூக்கி வைத்து ஆடுவதை விட்டுவிட்டு, தமிழக விவசாயிகளுக்காக உதவுவதையும், அவர்களது விளைபொருட்களை வாங்குவதையும் செய்ய ஆரம்பியுங்கள். திரைப்படங்களை பொழுதுபோக்காக மட்டுமே பாருங்கள். அவர்கள் உங்கள் பின்னால் வரட்டும், நீங்கள் அவர்கள் பின்னால் போகாதீர்கள், உங்கள் பலம் என்ன என்பது இளைஞர்களே உங்களுக்கு இப்போது தெரிந்துவிட்டது என சமூக வலைத்தளங்கள், வாட்ஸ்-அப் என நேற்றிலிருந்து அதிகமாகப் பரவி வருகிறது. நம் இளைஞர்களிடம் புதிய திருப்பங்களை எதிர்பார்க்கலாமா....?.