ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஜல்லிக்கட்டு தொடர்பாக கடந்த ஒருவார காலமாக நடந்து வந்த போராட்டம் இன்று போர்க்களமாக மாறி வருகிறது. போராட்டாக்காரர்கள் ஒவ்வொரு ஊராக அப்புறப்படுத்தப்பட்டு வருகிறார்கள். சில இடங்களில் தடியடியும் நடந்தது. மெரினாவில் விவேகானந்தா மண்டபம் முன்பு நடந்த போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் கடலில் இறங்கி போராட்டம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு தொடர்பாக ஆரம்பத்தில் இருந்தே போராட்டாக்காரர்களுடன் களமிறங்கி அவர்களுக்கு உறுதுணையாக இருந்து போராடி வந்த நடிகர் ராகவா லாரன்ஸ் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் மெரினாவில் போலீசார் மாணவர்களை அப்புறப்படுத்திய செய்தியை அறிந்த லாரன்ஸ், போராட்ட களமான மெரினா செல்ல விரைந்தார். ஆனால் போலீசார், லாரன்ஸை தடுத்து நிறுத்தினர். எனவே லாரன்ஸ் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.