ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்சினிமாவில் அஜித் தனது படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து கொடுப்பது ஊரறிந்த விஷயம்.. அதேபோல மலையாள சினிமாவில் மம்முட்டியும் தனது படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து கொடுப்பதை தவறாமல் கடைபிடித்து வருகிறார். சமீபத்தில் ரஞ்சித் டைரக்சனில் மம்முட்டி நடித்துவரும் 'புத்தன் பணம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக கோழிக்கோட்டில் உள்ள மகாராணி ஹோட்டலில் படக்குழுனர் சுமார் 150 பேருக்கு பிரியாணி பார்ட்டி வைத்து அசத்தினார்.. இது மம்முட்டி கொடுக்கும் நூறாவது பிரியாணி விருந்து என்பது குறிப்பிடத்தக்கது..
இப்படி பிரியாணி விருந்து கொடுக்க மம்முட்டி தயரானதே சுவாரஸ்யமான விஷயம் தான்.. கடந்த இருபது வருடங்களுக்கு முன் மம்முட்டி மோகன்லால் இருவரும் 'ஹரிகிருஷ்ணன்ஸ்' என்கிற படத்தில் இணைந்து நடித்தனர். இந்தப்படத்தின் ஷூட்டிங்கில் மம்முட்டிக்கு வீட்டில் இருந்து தலைவாழை இழையுடன் சாப்பாடு அனுப்பிவைத்தாராம் மம்முட்டியின் மனைவி.. ஆனால் அந்த சாப்பாட்டை மோகன்லால் எடுத்து சாப்பிட்டு விட்டாராம். இதனால் அடுத்தநாள் ஐந்து பேருக்குண்டான சாப்பாடு மம்முட்டியின் வீட்டில் இருந்து வந்ததாம். அதற்கடுத்த நாட்களில் மம்முட்டியின் வீட்டு ஸ்பெஷல் சாப்பாடு சாப்பிட ஆட்களின் எண்ணிக்கை அதிகரித்ததாம். இதனால் ஷாக்கான மம்முட்டி, அப்போதிருந்து தனது படக்குழுவினருக்கு படம் முடிவதற்குள் ஒருநாள் தனியாக பிரியாணி விருந்தே கொடுக்க ஆரம்பித்தாராம். இதோ இப்போது அந்த பிரியாணி விருந்துதான் செஞ்சுரி அடித்திருக்கிறது.