பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
2003ம் ஆண்டு சமுத்திரகனி இயக்கிய முதல் படமான உன்னை சரணடைந்தேன் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் ராஜேஷ் யாதவ். அந்த படம் யே அப்பய் சால மன்ஞ்சுடு என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் ஆனபோது அதற்கு ஒளிப்பதிவு செய்தார். அதன் பிறகு மழை, லீ, பொக்கிஷம், சில்லுனு ஒரு சந்திப்பு உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். கடைசியாக சென்னை 28 இரண்டாம் பாகத்திற்கு ஒளிப்பதிவு செய்தார். தற்போது 13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தெலுங்கு படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:
"பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருந்தாலும் சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகம் எனக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்திருக்கிறது. தற்போது தெலுங்கில் விஷணு மஞ்சு நடிக்கும் படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறேன். சுரபி ஹீரோயின். சாய் கார்த்திக் இயக்குகிறார். இந்த படத்தில் முதன் முறையாக நவீன எல்ஈடி லைட்டிங்கை பயன்படுத்த இருக்கிறேன். எவ்வளவு வெளிச்சம் வேண்டுமானாலும் இதிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். கொஞ்சம்கூட வெப்பம் இருக்காது. இதனால் ஹீரோ, ஹீரோயின்களுக்கு வியர்வை பிரச்சினை இருக்காது. தெலுங்கு படத்திற்கு பிறகு மீண்டும் வெங்கட்பிரபு படத்தில்