‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் நேற்று காலை சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதி சென்றார். சாமி கும்பிட்டுவிட்டு தன் குழந்தையை சுமந்தபடி கோவிலை விட்டு வெளியே வந்தபோது அவரிடம் தொலைக்காட்சி நிருபர்கள் ஜல்லிக்கட்டு கருத்து கேட்டனர். "நான் சாமி கும்பிட வந்திருக்கிறேன். ஜல்லிக்கட்டு பற்றி கருத்து சொல்ல முடியாது. கோவிலுக்கு வந்த என்னை ஏன் தொல்லை செய்கிறீர்கள்". என்று சொன்னவர்... திடீரென கேள்வி கேட்ட வீடியோ நிருபரை பிடித்து தாக்கினார். அவர் கேமராவை பறித்து அதில் உள்ள வீடியோ பதிவுகளை அழிக்க முயன்றார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை சமானதானப்படுத்தி அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் திருப்பதி பத்திரிகையாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.