இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
பீட்டா அமைப்பு, என்னை கவுரவப்படுத்தியதை அவமானமாக கருதுகிறேன்; அந்த அமைப்பில், நான் உறுப்பினராக இல்லை என, நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, டுவிட்டரில் அவர் விடுத்த அறிக்கை: மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன், சிந்து சமவெளி நாகரிகத்தில், காளையும், மனிதனும் இணைந்தே உழைத்ததை உணர்ந்து தான், இந்திய அரசு முத்திரையில், காளையை இடம் பெற செய்தனர். மாடு போல, மாட்டுக்காகவும் உழைப்பவன் தமிழன். ஜல்லிக்கட்டுக்கு தடை என்பது, ஒரு இனத்தின் அடையாளத்தை, பண்பாட்டை அழிக்கும் செயல். உலகம் முழுவதும் வாழும், 12 கோடி தமிழர்களின் உணர்வை மதித்து, ஜல்லிக்கட்டு நடத்த, பிரதமர் அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும். சுதந்திர போராட்டத்தை படித்த நான், முதல் முறையாக, இளைஞர்களின் வீரம் மிக்க போராட்டத்தை பார்க்கிறேன்.
தமிழக மக்கள் என்ற ஒரே உணர்வோடு, மிக கண்ணியமாகவும், கட்டுப்பாட்டோடும் மாணவர்கள் நடத்தும் அறப்போராட்டத்தை பார்ந்து வியந்து, தலை வணங்குகிறேன். பீட்டா அமைப்பு, நான் சைவ உணவு சாப்பிடுகிறவன் என்ற முறையில், என்னை சிறப்பித்தது. இப்போது, அதை பெரும் அவமானமாக கருதுகிறேன்; அதற்காக மிகவும் வருந்துகிறேன். நானோ, என் குடும்பத்தினரோ, பீட்டா அமைப்பில் உறுப்பினராக இல்லை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.