'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சி3 படத்தை விளம்பரப்படுத்தவே நடிகர் சூர்யா, ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராடுகிறார் என்று பீட்டா கூறிய கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீட்டாவிற்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் சூர்யா.
நடிகர் சூர்யா தொடர்ந்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை ஆதரித்து வருகிறார். ஆனால் பீட்டா அமைப்பின் நிர்வாகி நிகுஞ்ச் சர்மா என்பவர், பட விளம்பரத்துக்காகவே ஜல்லிக்கட்டை சூர்யா ஆதரிப்பதாக பேசினார். இது சூர்யா ரசிகர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் பீட்டாவிற்கு எதிராக கடும் கண்டனங்களை சூர்யா ரசிகர்கள் தெரிவித்தனர்.
அதோடு இந்த சம்பவம் சூர்யாவையும், சூர்யா குடும்பத்தையும் மிகவும் வருத்தமடைய செய்திருக்கிறது. அதனால் ஜல்லிக்கட்டுக்காக தன் சி3 புரொமோஷனையும் தள்ளி வைத்தார் சூர்யா. இந்நிலையில், தவறான செய்தியை பரப்பி வரும் பீட்டா அமைப்பை மன்னிப்பு கோரும்படியும், அவர்கள் பரப்பிய செய்தி தவறானது என்பதை தெரிவிக்கும் வகையில் பிரஸ் ரிலீஸ் ஒன்றை 7 நாட்களுக்குள் வெளியிடும்படியும் கூறி நடிகர் சூர்யா சார்பில் அவரது வக்கில் ஆர்.விஜய் ஆனந்த், பீட்டா அமைப்புக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.