ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் 4 நாட்களுக்காக போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த நடிகர் லாரன்ஸ் திடீரென மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஜல்லிக்கட்டு நடத்த கோரி மெரினா கடற்கரையில் 4 நாட்களாக லட்சக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில், பெண்களும் அதிகளவில் கலந்துகொண்டுள்ளனர். நடிகர் லாரன்ஸ் போராட்டத்தின் முதல் நாளே மெரினாவிற்கு வந்து ஆதரவு தெரிவித்தார்.
போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்களுக்காக உணவு, குடிநீர் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். மேலும், டாய்லெட் வசதி உள்ள 5 கேரவன்களை மெரினாவிற்கு கொண்டு வர உதவி செய்தார். இது, போராட்டத்தில் உள்ள பெண்களுக்கு பெரும் உதவியாக உள்ளது.
நடிகர் லாரன்சுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் கழுத்தில் பேன்ட் அணிந்து தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்டார். இந்நிலையில், 4 வது நாளான இன்று காலை 11.30 மணியளவில் திடீரென லாரன்ஸ் மயங்கி விழுந்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.