'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஜல்லிக்கட்டு விவகாரம் தமிழகத்தில் எழுச்சி போராட்டமாக மாறியுள்ளது. ஒட்டுமொத்த தமிழர்களின் குரல் முழுக்க உரக்க கேட்டு கொண்டிருக்கிறது. மாணவர்களின் போராட்டாத்திற்கு ஆதரவாக நடிகர் சங்கம் போராட்டம் நடத்தியது. ஆனால் இதற்கு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில் இன்று நடந்த நடிகர் சங்க போராட்டத்தில் விஜய் உள்ளிட்ட பல நடிகர்கள் பங்கேற்கவில்லை. நடிகர் விமலும் இன்றைய நடிகர் சங்க போராட்டத்தில் பங்கேற்கவில்லை. மாறாக திருச்சி மணப்பாறை அருகே நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்றார்.
இதுப்பற்றி செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விமல், ஜல்லிக்கட்டு நடைபெறாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. நடிகர்கள் நடத்தும் போரட்ட களத்தை விட, மண்ணில் நடந்த போராட்டத்தில் நானும் பங்கேற்று போரடியது மகிழ்ச்சி அளிக்கிறது'' என்று கூறினார்.