டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
குக்கூ படத்தை அடுத்து ராஜூமுருகன் இயக்கிய படம் ஜோக்கர். குருசோமசுந்தரம் நாயகனாக நடித்த அந்த படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதையடுத்து தாமிரா இயக்கி வரும் ஆண்தேவதை படத்தில் சமுத்திரகனிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். முதல் படத்தில் இருந்து இரண்டாவது படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாநாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறேன் என்கிறார் ரம்யா பாண்டியன்.
அவர் மேலும் கூறுகையில், ஜோக்கர் படத்தில் அதிகம் பேசாமல் நடித்தேன். ஆனால் இந்த ஆண்தேவதை படத்தில் அதிகமாக பேசும் வேடத்தில் நடிக்கிறேன். நிஜத்திலும் பிடித்தமானவர்களிடம் நான் நன்றாக பேசுவேன். ஐடியில் வேலை செய்யும் கணவன் மனைவிக்கிடையே நடக்கும் பிரச்சினைகள் பற்றிய கதை என்பதால் எனக்கு நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. முக்கியமாக இந்த படத்தில் 6 வயது பிள்ளைக்கு அம்மாவாக நடிக்கிறேன். அந்த அளவுக்கு அழுத்தமான வேடத்தை எனக்கு கொடுத்திருக்கிறார் டைரக்டர் தாமிரா. கதாபாத்திரத்தை உணர்ந்து இயல்பாக நடித்துக்கொண்டிருக்கிறேன். இப்படம் சமூகத்துக்கு நல்லதொரு மெசேஜ் சொல்லும் கதையில் உருவாகிறது.
இந்த படத்தைப்பொறுத்தவரை படத்தின் இயக்குனர் தாமிரா என்றால், படத்தின் நாயகன் சமுத்திரகனி, ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன் ஆகியோரும் டைரக்டர்கள் என்பதால் ஒரே படத்தில் மூன்று டைரக்டர்களிடம் பணியாற்றுவது போல் உள்ளது. மேலும், இயக்குனர் தாமிரா எப்படி எப்படி நடிக்க வேண்டும் என்பதை சொல்லி நடிக்க வைப்பார் என்றாலும், நான் ஏதேனும் சின்னச்சின்ன தவறுகள் செய்தால் உடன் நடிக்கும் சமுத்திரகனி சாரும் டிப்ஸ் கொடுப்பார். அப்படி அவர்கள் உறுதுணையாக இருப்பதால் இந்த படத்தில் நடிப்பது நல்ல அனுபவமாக உள்ளது. மேலும், ஜோக்கர் படத்தைப்பார்த்து விட்டு சமுத்திரகனி சார் மூலமாகத்தான் ஆண்தேவதை படவாய்ப்பு எனக்கு வந்தது. இப்போது அவருடன் இணைந்து நடிக்கும் எனக்கு அவர் இயக்கும் படத்திலும் நடிக்க வேண்டுமென்ற ஆசை உள்ளது. எதிர்காலத்தில் கண்டிப்பாக அவர் படத்தில் எனக்கு வாய்ப்பு தருவார் என்று நம்புகிறேன்.
அதோடு, கதை-நாயகன் இரண்டில் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்? என்று கேட்டால், கதைக்கும், கதாபாத்திரத்திற்குதான் நான் முதலிடம் கொடுப்பேன். என் திறமையை வெளிப்படுத்த நல்ல ஸ்கோப் இருக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டுதான் தற்போது கதைகள் கேட்டு வருகிறேன். அதேசமயம் எல்லா முன்னணி ஹீரோக்களுடனும் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசையும் எனக்கு உள்ளது. சீனியர் நடிகைகளான ராதிகா, சுகாசினி, ரேவதி ஆகியோர் எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள். அதற்காக அவர்களை மாதிரி நடிக்க வேண்டும் என்று ஆசைப்படவில்லை. எனக்கு கிடைக்கிற கேரக்டர்களில் எனது பாணியிலேயே நடிப்பேன். மற்றவர்களை ரசிப்பதோடு சரி. அவர்கள் சாயலில் நடிக்க முயற்சிக்க மாட்டேன். முக்கியமாக இன்றைய ரசிகர்கள் யதார்த்தமான நடிப்பை விரும்புகிறார்கள். அதனால் செயற்கைத்தனமான நடிப்பு இல்லாமல் இயல்பான நடிப்பையே வெளிப்படுத்துவேன் என்கிறார் ரம்யா பாண்டியன்.