ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவுக்கு எதிராகவும் போராட்டம் வலுவடைந்துள்ள நிலையில் பீட்டா அமைப்பில் உறுப்பினர்களான உள்ள நடிகர், நடிகைகள் பற்றி சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு பீட்டா அமைப்பு தனுசுக்கு சிறந்த சைவ ஆதரவாளர் என்ற விருதை வழங்கியது. அந்த புகைப்படத்தை வெளியிட்டு தனுசும், அவரது மனைவி ஐஸ்வர்யா தனுசும், பீட்டா உறுப்பினர்கள், எனவே அவர்கள் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்கிற செய்தி பரவியது. இதைத்தொடர்ந்து தனுஷ் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து சமவெளி நாகரிகத்தில் காளையும் மனிதனும் இணைந்தே உழைத்ததை அறிய முடிகிறது. இதை உணர்ந்துதான் இந்திய அரசு, அரசு முத்திரையில் காளையை இடம் பெற செய்திருக்கிறது. உலகத்தில் உள்ளவர்கள் எல்லாம் ஆடு, மாடுகளை கால்நடை என்றழைத்த போது தமிழன் கால்நடைச் செல்வம் என்றழைத்து பெருமிதப்படுத்தினான்.
மாடு போல் உழைப்பான்... தமிழன் மாட்டுகாகவும் உழைப்பான் தமிழன். காளைகள் தமிழக மக்களின் குடும்பத்தில் ஒரு உறுப்பினர். ஜல்லிகட்டுக்கு தடை என்பது ஒரு இனத்தின் அடையாளத்தை பண்பாட்டை அழிக்கும் செயல். ஜல்லிகட்டு இல்லாமல் பொங்கல் விழா நிறைவுராது. உலகம் முழுக்க வாழ்கிற 12 கோடி தமிழர்களின் உணர்வை மதித்து பிரதமர் ஜல்லிகட்டை நடத்த அவசர சட்டம் இயற்ற வேண்டும்.
இந்திய சுதந்திர போராட்டத்தை பற்றி படித்திருக்கிறேன். இப்போதுதான் தமிழ்நாட்டு இளைஞர்களின் வீரம்மிக்க போராட்டத்தை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. எந்த அரசியல் தலைவர்களின் வழிகாட்டுதல் இல்லாமல், கொடி இல்லாமல், சாதி, மத வேறுபாடு இல்லாமல் தமிழ்நாட்டு மக்கள் என்ற ஒற்றை உணர்வோடு மிகவும் கண்ணியமாகவும் கட்டுகோப்போடும் நடத்தும் அறவழிப் போராட்டத்தை பார்த்து, வியந்து தலை வணங்குகிறேன். தேவையான அணைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறேன்.
என்னை போன்ற நடிகர்களின் ரசிகனாக இருந்த இளைஞர்கள் இன்று தமிழ் இளைஞர்களின் ரசிகனாக என்னை மாற்றி இருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு பீட்டா அமைப்பு சைவ உணவு சாப்பிடுகிறவன் என்ற முறையில் என்னை சிறப்பித்தது. இப்போது அதை பெரும் அவமானமாக கருதுகிறேன். அதற்காக மிகவும் வருந்துகிறேன். நானோ, எனது குடும்பத்தாரோ யாரும் பீட்டா அமைப்பில் உறுப்பினராக இல்லை. இருக்கிறார்கள் என்று யாராவது கூறினால் வீண் வதந்தி. ஆகவே மத்திய அரசு காளையை வன விலங்கு பட்டியலிருந்து நீக்க வேண்டும். காளையை காட்சி படுத்தப்பட்ட விலங்கு என்ற பட்டியலிருந்து நீக்க வேண்டும். வாடி வாசல் மூலமாக ஜல்லிகட்டு நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு வலியுறுத்துகிறேன். இவ்வாறு தனுஷ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.