மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தியேட்டர்கள் காட்சிகள் நாளை(ஜன.,19ம் தேதி) ரத்து செய்யப்படுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டம் தமிழகத்தில் அடுத்த லெவலுக்கு சென்று கொண்டு இருக்கிறது. நடிகர் சங்கம் உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு ஆதரவாக திரையரங்கு உரிமையாளர்களும் களம் இறங்குகின்றனர். இதுதொடர்பாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் கூட்டமைப்பு சார்பில் அபிராமி ராமநாதன், பன்னீர்செல்வம் இருவரும் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதன்படி நாளை(ஜன., 20ம் தேதி) தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் காலை முதல் மாலை 6 மணிவரை அனைத்துக் காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர்.